14 மார்ச், 2010

பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்

 
பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். இவற்றுள் ஒரே கட்சியின் ஆதரவாளர்களிடையேயான மோதல்கள் தொடர்பிலான 39சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 07 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக