25 பிப்ரவரி, 2010





புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், .பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன.


புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் மெழுகுவர்த்தி சின்னத்திலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்திலும் இவ்விரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்தவகையில வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவை புளொட்டின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) இன்று வவுனியா கச்சேரியில் தாக்கல் செய்துள்ளது. இதில் தலைமை வேட்பாளராக புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தனும், மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), வண. பிதா பிரான்ஸிஸ் ரஞ்சித் ரூஸ்வெல்ட் அவர்கள், பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்), கந்தையா ஞானதாஸ் (சிவம்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பாலச்சந்திரன், திருமதி சுப்பிரமணியம் வரோனிகா (இந்திரா), வைரமுத்து திருவருட்செல்வம், துரைச்சாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு) ஆகியோர் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் மெழுகுவர்த்தி சின்னத்திலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்திலும் இவ்விரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்தவகையில வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவை புளொட்டின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) இன்று வவுனியா கச்சேரியில் தாக்கல் செய்துள்ளது. இதில் தலைமை வேட்பாளராக புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தனும், மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), வண. பிதா பிரான்ஸிஸ் ரஞ்சித் ரூஸ்வெல்ட் அவர்கள், பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்), கந்தையா ஞானதாஸ் (சிவம்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பாலச்சந்திரன், திருமதி சுப்பிரமணியம் வரோனிகா (இந்திரா), வைரமுத்து திருவருட்செல்வம், துரைச்சாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக