25 பிப்ரவரி, 2010


கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக உற்சவ ஏற்பாடுகளைக் கவனிக்க விசேட குழு கச்சதீவுக்கு பயணித்துள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த உற்சவத்தின் ஆரம்ப ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் நெடுந்தீவு பங்குத்தந்தை ஆகியோரைக் கொண்ட குழுவினர் இன்று நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கு பயணித்துள்ளனர். மேலும் நெடுந்தீவிலிருந்து புறப்படும் மீன்பிடிப் படகுகள் தமது பயணத்துக்கான பதிவுகளை நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்க சமாஜத்தில் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கான பயணக் கட்டணமாக 100ரூபா அறவிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக