25 பிப்ரவரி, 2010

இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை


இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது பற்றிய கலந்துரையாடல் இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான மீனவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை நேற்று முன்தினம் 22இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக