9 ஜூன், 2011

ஜிழிலி மாமா ரி.எம். வி. பி. உறுப்பினரல்ல: செய்திக்கு மறுப்பு

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை (ரி. எம். வி. பி.) தொடர்புபடுத்தி வெளியான செய்தியை அக்கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ சி. கைலேஸ் வரராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும் மக்களுக்கான அபிவிருத்தியினையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது செய்துவரும் இத்தருணத்தில், அக்கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையைக் கூட பெற்றிராதவர் சந்திவெளி மாமா எனப்படும் வடிவேல் மகேந்திரன்.

உண்மை இவ்வாறிருக்க நேற்று புதன்கிழமை தினகரன் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியான செய்தியில் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், முக்கியஸ்தர் என்று இன்ரப்போல் பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் வடிவேல் மகேந்திரனை குறிப்பிட்டிருப்பதை எமது கட்சியின் உயர்பீடம் மறுத்துரைக்கின்றது.

இன்ரப்போல் தேடப்படும் பீ. எல். ஓ. மாமா தற்போது சந்திவெளிப் பகுதியில் மறைந்து இருக்கலாம் என்றும், இவர் வேறு ஒரு ஆயுதக் குழுவைச் சேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஆதலால், இன்ரப்போலால் தேடப்படும் சந்திவெளி மாமா எனப்படும் வடிவேல் மகேந்திரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் என்ற அந்தஸ்தைக் கூடப் பெற்றிராத நிலையில், குறித்த நபரை எமது கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர் என்று குறிப்பிட்டிருப்பது வேடிக்கைக்குரியது. இந்நிலையில், குறித்த பி. எல். ஓ. மாமாவை எமது கட்சியோடு தொடர்புபடுத்தி செய்தி வெளிப்பட்டதை எமது கட்சி மிக வன்மையாக மறுத்துரைக் கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக