9 ஜூன், 2011

பல்கலை மாணவர் தலைமைத்துவ பயிற்சி முதற்கட்டம் பூர்த்தி 2ம் கட்டம் 17ம் திகதி ஆரம்பம்


பல்கலைக்கழக மாணவர்க ளுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் முதற் கட்டம் வெற்றிகரமாக முடிவுற்றுள்ள துடன் இரண்டாம் கட்டப் பயிற்சி எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பமாகுமென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

முதற்கட்டப் பயிற்சிகள் 28 மத்திய நிலையங்களில் நடைபெற்றதுடன் உயர் கல்வியமைச்சின் கேள்விக்கமைய 85 சதவீதமான மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர் என தெரிவித்துள்ள அவர், இரண்டாம் கட்டப் பயிற்சியில் 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டப் பயிற்சிகளுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து ள்ளதாகவும், மதவாச்சி கடற்படைப் பயிற்சி மத்திய நிலையத்திலும், சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகடமியிலும், இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு 6000 மாணவர்களையும் 4000 மாணவிகளையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

கடிதம் கிடைக்காத மாணவர்கள் உயர்கல்வியமைச்சின் (சூசூசூ.ஙிச்கீடீ.கிச்சு.ங்கூ) இணையத்தளத்தினூடாக அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதற்கட்டமாக தலைமைத்துவப் பயிற்சி இம்மாதம் 11ம் திகதி நிறைவடை வதுடன் அதில் பங்குபற்றிய மாணவர்கள் தமது ஊர்களுக்கு திரும்ப வசதியாக போக்குவரத்து அமைச்சின் மூலம் பஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று வாரகால தலைமை த்துவப் பயிற்சி நிறைவு பெற்றவுடன் அடுத்த நடவடிக்கையாக இவர்களுக்கு ஆங்கில அறிவு, கணனி மற்றும் பயிற்சி செயலமர்வு மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி. கணேகல தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள் நடந்த பின்னர் பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிக்கும் இந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் மடிக்கணனி களையும் அன்பளிப்புச் செய்யும். இவர்கள் பட்டம் பெற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் செய்யும் போது இந்த மடிக்கணனிகளுக்கான செலவுத் தொகையை சிறிது சிறிதாக அரசாங்கத்திற்கு திரும்ப செலுத்துவதற்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாணவ, மாணவியர் நல் ஒழுக்கத்துடன் பல்கலைக்கழக கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் இதற்கான செலவை அறவிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்குமென்று உயர்கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் நடத்துவதற்கு பதில் முழுமையாக கல்வியில் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்களின் அமைதியையும், கெளரவத்தையும் இந்த மாணவர்கள் கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் தங்களுக்கு இருக்கிறதென்றும் இவர்கள் பல்கலைக்கழங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள பகிடிவதை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, இவ்விதம் தலைமைத்துவ பயிற்சியைப் பெறும் பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இப்போது கடமை, கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடிய வகையில் அவர்களின் மனோ நிலை மாற்றமடைந்திருக்கிறதென்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக