9 ஜூன், 2011

பிரிவினைவாத கருத்துணர்வு ஒழியும் வரை அவசரகாலச் சட்டம் அவசியம் பாராளுமன்றத்தில் 442 வது தடவை நீடிப்பு: அமைச்சர் டளஸ்


442 ஆவது தடவையாக அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நடைபெறுகிறது. பிரிவினைவாத கருத்துணர்வு முழுமையாக ஒழிக்கப்படும் வரை அவசரகாலச் சட்டம் குறிப்பிட்டளவில் அமுலில் இருக்க வேண்டும். அது வரை கட்டம் கட்டமாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-

1953 ஆம் ஆண்டு ஐ. தே. க. அரசு முதன் முதலில் அவசரகாலச் சட்டம் குறித்து சபையில் விவாதித்தது. 1979 முதல் வடக்கில் உருவான பயங்கரவாதத்தை தடுக்க அவசரகால சட்டத்தை நீடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜனநாயக நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவது பொறுத்தமற்றது என்பதே அனைவரதும் நிலைப்பாடு.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதும் பிரிவினைவாத கருத்துகளும் அதற்கு உதவும் குழுக்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இன்னும் காணப்படுகிறது. இதனால் அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் மரணம் என்பது சாதாரண சம்பவமாக இருந்தது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் மரணத்துக்கு பெறுமதி ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க சம்பவத்தில் அது புலனானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக