9 ஜூன், 2011

கொச்சியில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்களுட்பட 9 இலங்கையர் கைது

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட 9 இலங்கையர்கள் சட்ட விரோதமாக வேறொரு நாட்டுக்குச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆட்களைக் கடத்தும் கும்பலால் வேறொரு நாட்டுக்கு அனுப்புவதற்காக அவர்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் எதையும் கூற மறுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் கொல்லம் நகரில் இதே போல் விடுதி ஒன்றில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி தங்கியிருந்த 39 இலங்கை நாட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் உள்ளூர் முகவர் ஒருவரின் உதவியுடன் அவுஸ்திரே லியாவு க்கு செல்ல முயன்றது விசாரணையில் தெரி யவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக