9 ஜூன், 2011

வடக்கில் நரக வேதனை அனுபவிக்கும் பெண்களின் துயரங்களை உணர்கிறேன்:அனோமா

கணவர்மார்களை இழந்து வடக்கில் வாழும் பெண்களின் துயரங்களை நானும் உணர்கின்றேன். ஜனநாயகம் எனக் கூறி எமது கணவன்மார்களை சிறை வைத்தும், கொலை செய்தும், காணாமல் செய்யும் இந்த நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக அனைத்து பெண்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன் கிழமை லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையில் ஜனநாயகம் எங்கே இருக்கின்றது. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி பல்வேறு காரணங்ளுக்காக கணவர்மார்களையும் ஏனைய உறவினர்களையும் இழந்து எத்தனை பெண்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். இதனைமாற்றியமைக்க வேண்டும். பெண்கள் தமது உறவுகளையும் உடமைகளையும் இனி வரும் காலங்களில் இழக்க கூடாது. வடக்கு பெண்களின் சொல்லொணாத் துயரத்தை இன்று நானும் உணர்கின்றேன் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக