6 மே, 2011

தனியார் மின்சார கம்பனியில் 61 கோடி ரூபா நிதி மோசடி பொது முகாமையாளர் பணி நீக்கம்


இலங்கை தனியார் மின்சார கம்பனி (லெக்கோ) பொது முகாமையாளர் கலாநிதி அசந்த பெரேராவை வேலை நீக்கம் செய்ய மின்சார சபை பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெக்கோ பொது முகாமையாளர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

பெக்கோ நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 61 கோடி ரூபா நிதி மோசடி தொடர்பிலே இவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இங்கு இடம்பெற்ற 52 கோடி ரூபா நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்போது 61 கோடி ரூபா நிதிமோசடி இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவர் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இடைநிறுத்தப்பட்ட பெக்கோ பொது முகாமையாளரை மின்சார சபை பொது முகாமையாளர் ஹந்ரா ஜயவீர மின்சார சபை பிரதான பொறியலாளராக நியமித்துள்ளார். மின்சார சபை பணிப்பாளர் சபையின் அனுமதியின்றியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மேற்படி பதவியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக