6 மே, 2011

பயங்கரவாதத்தை துடைத்தெறிய பலம்வாய்ந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கை எமக்கு மிகவும் பலம் சேர்க்கும்

தாய்நாட்டை நேசித்தால் மட்டுமே வீட்டில் நிம்மதியாக வாழ முடியும்
யுத்த காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக் களை கிண்டி கிளறிக்கொண்டிராமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டி யெழுப்ப அனைவரும் உதவ வேண்டும் என பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திலிருந்து, தற் போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளூரில் சுதந் திரமாக நடமாடும் முன்னாள் புலி உறுப்பினர்களுடன் தொடர் புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயன்று வருவதுடன், புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டை தொடர் ந்தும் நடத்தவும் முயன்று வருகின்ற னர்.

புலிகள் இயக்கத்தை முற்றாக எமது நாட்டிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு சமாதானத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை முழு உலகத்திலிருந்தும் துடைத்தெறிவதற்கு பலம்வாய்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளது எமக்கு மிகவும் பலமாக இருக்கிறது.

பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டது அவரல்ல என்றும் இன்னொரு சாரார் கூறுகின்றனர். எதுஎவ்வாறாயினும் பிரபாகரனைப் போல் பின்லேடனின் மரணமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கையை இந்த நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர். கடந்த மேதினத்தின் போது இனம், மதம், மொழி, பிரதேசம், கட்சி வேறுபாடின்றி மக்கள் இதனை நிகழ்த்திக்காட்டிவிட்டனர்.

ஐ.தே.க தலைவர் உட்பட ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் இந்த அறிக்கையை நிராகரித்துவிட்டனர். டொலர்களுக்கு அடிமையானவர்கள் சிலர் மட்டுமே இதனை வரவேற்றனர். தாய்நாட்டை நேசித்தால் மட்டுமேதான் வீட்டில் கூட நிம்மதியாக வாழ முடியும். தாயை, தந்தையை நேசிப்பது போன்று தாய்நாட்டை நேசிக்கவேண்டும்.

இரு தரப்புக்கும் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிரிழப்புக்கள் இடம்பெறுவது இயற்கையே. இதனை கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதில் பலனில்லை. நாட்டை கட்டியெழுப்ப உதவ வேண்டும்.

அவசரகாலச் சட்டத்தின் முழுமையான சரத்துக்களும் இப்போது அமுலில் இல்லை. மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு எதுவித தடையுமில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிக்கக்கூடிய எதுவும் இப்போது அமுலில் இல்லை.

பயங்கரவாதமொன்று நாட்டில் மீண்டும் தலையெடுக்க வழிவகைகள் செய்யக்கூடிய சரத்துக்கள் மட்டுமே இப்போது அமுலில் உள்ளன என்றும் பிரதமர் டி. எம். ஜயரட்ன கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக