6 மே, 2011

பாகிஸ்தானுக்கு தெரியாமல் ஒஸாமா வாழ்ந்திருக்க முடியாது அமெரிக்கா சந்தேகம், அறிக்கை சமர்ப்பிக்குமாறு அழுத்தம்


அல்கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இவ்வளவு காலமும் பாகிஸ்தான் அரசுக்கோ, உழவுத்துறைக்கோ தெரியாமல் எவ்வாறு மறைந்து வாழ்ந்தார் என்பதை இஸ்லாமாபாத் தெளிவாக விளக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. பின்லேடனைக் கைது செய்யவோ, கொலை செய்யவோ இவ்வளவு நீண்டகாலம் தேவைப்பட் டிருக்கமாட்டாது.

பாகிஸ்தான் அரசாங்கம் அல் கைதாவுக்கு ஒரு முகமும், மேற்கு நாடுகளுக்கு வேறு முகமும் காட்டியதாலே ஒஸாமாவைக் கொலை செய்ய ஒரு தசாப்தம் தேவைப்பட்டதாகவும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு விரிவான அறிக்கையொன்று வெளியிட வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்நிலைமை வாஷிங்டன், இஸ்லாமாபாத் உறவுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. ஒஸாமாவைத் தேடி வஸிரிஸ்தான் மாநிலத்தில் பல வருடங்களாக நேட்டோ படைகள் குண்டு மழை பொழிந்தன. ஆனால் நான்கு வருடங்களாக ஒஸாமா பின் லேடன் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அப்போடாபாத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரின் இந்த மாளிகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளார்.

இவ்வளவு இறுக்கமான பாதுகாப்புகளை மீறி எவ்வாறு பின்லேடன் அப்போடாபாத் வந்தார். நான்கு வருட வாழ்க்கையில் ஒரு துளி தகவல்களும் வெளியே வராதது ஏன்? ஒஸாமா வாழ்ந்த மிகப் பெரிய மாளிகையை கட்டும் போது அரச, நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்? போன்ற கேள்விகளை சி. ஐ. ஏ. அடுக்கிக் கொண்டே போகிறது.

இவ்வாறுள்ள நிலையில் ஒஸாமா வாழ்ந்த வீட்டில் இருந்து ஐந்து கணனிகள், ஆவணங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ஒஸாமாவின் வங்கிக் கணக்குகள், அருடன் தொடர்புடையோர், அல்- கைதாவின் எதிர்கா இராணுவத் திட்டங்கள் என்பவற்றை கண்டறியலாம் என நம்பப்படுகிறது. இவை வெளியே வந்தால் இன்னும் நிலைமைகள் மோசமாடையும்.

அமெரிக்காவின் சந்தேகஙக்ளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அல் கைதா, தலிபான் என்பன பாகிஸ்தானின் எதிரிகள். முன்னாள் ஜனாதிபதி முஷ்ரஃப் காலத்தில் இருந்து பாகிஸ்தானில் மிக மோசமான தாக்குதல்களை இந்த அமைப்புகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக