6 மே, 2011

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து வேட்டை

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்து அதனை ஐ.நா.வுக்கு அனுப்ப ஷபுலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம்ஞூ முடிவெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தக் கையெழுத்து வேட்டையில் புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த ஈழநேரு கருத்து தெரிவிக்கையில்,

'இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் காரணமாகும். எனவே இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி முதல் சென்னை வரை கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். பின்னர் இதனை ஐ.நா.வுக்கு அனுப்புவோம். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக