15 மார்ச், 2011

ஐ.தே.க. மனு உள்ளிட்ட மூன்று மேன்முறையீடுகளை நிராகரித்தது நீதிமன்றம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மேன்முறையீட்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

ஏறாவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியும், குச்சவெளி பிரதேச சபைக்கென லங்கா சமசமாஜக் கட்சியும், கந்தளாய் பிரதேச சபைக்கென சுயேட்சைக் குழு ஒன்றினாலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்கள் மனுக்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக