15 டிசம்பர், 2010

மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் - உயர் பொலிஸ் அதிகாரிகள் பயிற்சி செயலமர்வு





முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொலிஸ் பொதுமக்கள் உறவுப்பாலம் எனும் கருப்பொருளிலான ஒரு நாள் பெயலமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருனாரட்ன தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், தொடர்பாடல் பொலிஸ் பணிப்பாளர் நாயகம் நந்தன குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு விளக்கமளித்தார்.

மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக