8 டிசம்பர், 2010

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு



அடைமழை காரணமாக இரணைமடுக்குளம் நிரம்பியுள்ளது. குளத்தின் பதினொரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்பது அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வான்கதவுகளால் நீர் வெளியேறுவதை தென்னிலங்கையிலிருந்து வரும் பெருந்திரளான பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக