8 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஞேவிற்கு பிணைவழங்க பிரித்தானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இவரை இம்மாதம் 14 ஆம் திகதிவரை தடுத்துவைக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய நேரப்படி நேற்று காலை 9.00 மணிக்கு கைதுசெய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்ஞே வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நேற்று நிறுத்தப்பட்டார்.

எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரின் சட்டத்தரணி இது சர்வதேச சதியெனவும் சுவீடன் மீது பிரியோகிக்கப்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே அந் நாட்டு நீதிமன்றம் இவருக்கு பிடியாணை விடுத்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக