15 ஜூலை, 2010

நெடுங்கேணி பிரதேச செயலகம், வவுனியா சமுர்த்தி மகாசங்க கட்டிடம் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்துவைப்பு



பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நெடுங்கேணி பிரதேச செயலகம் மற்றும் வவுனியா சமூர்த்தி மகாசங்க கட்டிடம் ஆகியன நேற்றுமாலை திறந்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெடுங்கேணியில் மீள்குடியேறிய மக்களுக்கான அனைத்து வசதிகளும் குறித்த பிரதேச செயலகத்தினூடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் வவுனியா பிரதேச மக்களுக்கான சமூர்த்தி வேலைத்திட்ட அபிவிருத்தியினை முன்னிட்டு மகாசங்கம் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் நீதியமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, பிரதியமைச்சர் பி.குரே, அமைச்சின் செயலர் கம்லத் உள்ளிட பலரும் பங்கேற்றிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக