15 ஜூலை, 2010

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துகோரும் தமிழர்கள் உண்மையான அகதிகளென நிபுணர் தெரிவிப்பு


அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துகோரும் தமிழ்மக்கள் உண்மையான அகதிகளே என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் என்பதால் அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என நோக்கப்படுவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் கிலைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியா வந்த இலங்கைத் தமிழர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கிலைவ் வில்லியம் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த மக்களை புலிகள் எனக் கூறிவிட முடியாது. இரத்தக்கறையுடன் வரும் தமிழர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்க முடியாது.

எனினும் அவுஸ்திரேலியாவிற்குள் வரும் 99 சதவீதமான தமிழர்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக