15 ஜூலை, 2010

ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிரில் இலங்கையர்கள் போராட்டம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு எதிரில் இலங்கையர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினை கலைக்குறுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர்கள் குழுவினை கலைக்குமாறு இலங்கையர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு எதிரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக