15 ஜூலை, 2010

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானியச் சிறுமி மீது பாலியல்

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக தாய் தந்தையருடன் வந்த 14 வயது பிரித்தானியச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டுள்ள சம்பவம் காலி தலபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக் குடும்பத்தினர் காலியில் உள்ள தலபே பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனியாக தங்கியிருந்த வேளை ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் இச் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார் என அச் சிறுமி தெரிவித்துளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொழும்பில் உள்ள சுற்றுலா பயணிகள் பிரிவுப் பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக