15 ஜூலை, 2010

. நீண்ட கால புதிருக்கு விடை: கோழியில் இருந்துதான் முட்டை வந்தது விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு




முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பது இதுவரை யாரும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்து உள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர் உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும் அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.

வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக