10 மார்ச், 2010

வன்னியில் மோதலின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் பலரால்




 
வன்னியில் மோதலின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் பலரால் அபகரிக்கப்பட்டு வன்னியை விட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக மிக அண்மையில் கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கான நடவடிக்கையை கிளிநொச்சி அரசஅதிபர் மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். வன்னியில் நடந்த மோதலின்போது தமது உடமைகளை தாம் இடம்பெயரும்போது தம்முடன் புதுமாத்தளன்வரை எடுத்துச்சென்று பின்னர் அங்கு கைவிட்டுச் சென்றதாகவும், அவ்வாறான வாகனங்கள் மோட்டார் பொருட்கள் என்பன பலரால் அங்கிருந்து அகற்றப்பட்டு மறைவான இடங்களில் வைத்து முக்கியமான பாகங்கள் களவாடப்பட்டு வன்னியைவிட்டு வெளியிடங்களுக்கு அனுப்ப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வசித்த பெருமளவிலான வாகனச் சொந்தக்காருக்குரிய பதிவு ஆவணங்கள் இல்லை. இந்நிலையில் துணிந்து சென்று வாகனங்களை கோரமுடியாத நிலமையும் நிலவுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக