10 மார்ச், 2010

ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தகாலத்தில்


ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தகாலத்தில் அவர் தமக்கு கீழ் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகளையும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இத்தகவலை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் லக்ஸ்மன் உலுகொல்ல வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ அதிகாரியாக இருந்தகாலத்தில் அவரது காரியாலயத்தில் வைத்தே இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியிருக்கிறார். சிலரை இருட்டறையில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதுபற்றி முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. என்றும் லக்ஸ்மன் உலுகொல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக