18 டிசம்பர், 2010

அவசியமில்லாமல் இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர் – மானிப்பாய் பொலிஸார் அறிவிப்பு




யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மானிப்பாய் பகுதியில் அவசியமில்லாமல் இரவில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த பொலிஸார் கொள்ளையர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழ். பழம் வீதியில் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மூவர் அந்தக் கிராமத்தின் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக