18 டிசம்பர், 2010

அரச ஊழியர்களுக்கு அமைச்சரின் அறிவுரை



ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டுமாயின் தனியார் துறை ஊழியர்களைப் போல அரச ஊழியர்கள் மும்முரமாகச் சேவை செய்ய வேண்டும் என உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தனியார் துறையினர் ஒரு தேவையை இலக்காகக் கொண்டு சேவை செய்கின்றனர். ஆரச துறையினர் அதனை உணர்வதில்லை. வெற்றி என்பது இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதனை அடைய திடசங்கற்பம் அவசியம்.

தனியார் துறையினரின் பொருளாதாரப் பங்களிப்பைப் போன்று அரச துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவர்களைத் வேண்டியுள்ளது" என அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக