18 டிசம்பர், 2010

கடும் பனிப்பொழிவு : கிறிஸ்தும‌ஸ் கொண்டாட முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தவிப்பு




பெர்லின்: ஐரோப்பா நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் ,சுவீ்ட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த 450 -க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஐரோப்பா நாடுகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. 0 டிகிரிக்கு உறைபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜெர்மன், பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து நாடுகளில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆங்காங்கே வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பெர்லின் நகரில் விபத்தில் 3 பேர்பலியானார்கள். மேலும் ஜெர்மனியில் பிராங்பர்ட், முனிச், சுனோர்வாங் ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு்ள்ளது. சில நகரங்களில் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஜெர்மனின் வூட்டன்பெர்க் நகரில் ஏற்பட்டசாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதே ‌போன்று ஜ‌ெனிவா, ஜூரிச் ஆகிய விமான நிலயைங்களில்விமான சேவை ரத்து செய்யப்பட்டு்ள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பனிப்பொழிவு அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் பண்டிகை விடுமுறையை கொண்ட பிற நாடுகளுக்கு தங்கள் குழந்தை குடும்பத்தினருடன் பயணிக்க முடியாமல் ஐரோப்பியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக