18 டிசம்பர், 2010

பிரிட்டனின் செயற்பாட்டை கண்டித்து; யாழ்ப்பாணத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்


ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரித்தானிய அரசும் புலம்பெயர்ந்த தமிழர்களும் திட்டமிட்டு நடாத்திய அநாகரிகமான செயற்பாடுகளை கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.

மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசாவின் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட விருக்கின்றது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்தில் யாழ். குடாநாட்டின் சகல இடங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட செயலாளர் அ. ரங்கா துஷார மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக