18 டிசம்பர், 2010

பண மோசடிக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உப தலைவர் கைது

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்ச ரூபாய்கள் மோசடி செய்த குற்றத்தின் பேரில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் உப தலைவர் சுதத் அஸங்க பண்டாரவை கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்தனர்.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை வாய்ப்பை தமக்கு பெற்றுத் தரவில்லை என பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கண்டி பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதேச சபையின் உப தலைவரை இன்று மாலை கண்டி பிரதம நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக