18 டிசம்பர், 2010

சிவனொளிபாதமலை யாத்திரை நாளை மறுதினம் ஆரம்பம்

இவ்வருடத்திற்கான சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப்பருவக்காலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வருடம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத இரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதம் பவனியாக நாளை 19 ஆம் திகதி காலை சுபவேளையில் புறப்பட்டும்.

அதன்பின்னர் நாளை மறுதினம் 20 ஆம் திகதி அதிகாலையில் ஆலயத்தில் இடம்பெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப்பருவக்காலம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக