15 செப்டம்பர், 2010

தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: சந்திரகாந்தன்.

கிழக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

மட்டு, வாகனேரி கோகுலம் வித்தியாலத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், எமது மக்களை இலகுவாக அரசியல் வாதிகள் ஏமாற்றுவதற்கு காரணம், எம் மக்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை தெளிவில்லாதவர்களாக இருப்பதே ஆகும்.

ஆனால் இனிவருகின்ற காலங்கள் நாம் அவ்வாறு இருந்திட முடியாது. ஏனெனில் காலம் மிகவும் விரைவாகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நோக்கி நகர்கின்றது.

அதற்கேற்றாப் போல் நாமும் நுகர வேண்டிய கடமை இருக்கின்றது. எனவே உணர்வுள்ளவர்களாக இருக்கின்ற நேரம் தெளிவுள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க கூடியதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொன்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக