15 செப்டம்பர், 2010

இரத்தினபுரி நிவத்திகலை தோட்டத்தில் பதற்ற நிலை தொடர்கிறது

இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அங்கு பதற்றநிலை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து கரவிட்ட திமியாவ பகுதியில் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.அங்கு பதற்ற நிலை தொடர்வதன் காரணமாக தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக