15 செப்டம்பர், 2010

மீள்குடியேற்றம் தொடர்பில் நீல் புனே ஆயராய்வு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புனே உட்பட ஐரோப்பி ஒன்றிய பிரதி நிதிகள் அடங்கிய குழு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்ற பிரதேசங்களில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேறிய பகுதி மக்களின் நிலைமைகள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் விளக்கி கூறியதுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது இக்குழவிடம் விளக்கி கூறினார்.

இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வதிவிடப்பிரதி நிதி அஸதுர் றஹ்மான் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக