15 செப்டம்பர், 2010

18ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்து: அமெரிக்கா - இலங்கை ஆராய்வு


இலங்கையின் 18ஆவது அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடக அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவை நேற்று சந்தித்த அமெரிக்க தூதுவர் புட்டெனிஸ், அமைச்சரின் அறிக்கை மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆகிய இரண்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இலங்கையில், ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களை கொடுக்கும் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் அது ஜனநாயகத்தை அலட்சியம் செய்யும் என தெரிவித்தும் அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக