15 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை




விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் வரை போராடப்போவதாகக் கூறிய அந்நபர் 18 மணிநேரத்தின் பின்னர் நேற்றிரவு தரையிறக்கப்பட்டார். நீர்,ஆகாராம் எதுவுமின்மையால் உடல்நிலை பாதிப்புற்ற அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காலியைச் சேர்ந்த மகேஷ் சொய்சா (வயது 31) என்பவரே திடீரென இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக