15 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறியிருந்து அச்சுறுத்திய நபர் கீழே இறக்கப்பட்டார்



இன்று காலையிலிருந்து உயரமான விளம்பரத் தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த நபர் சற்று முன் தீயணைப்பு துறையினரால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில், விளம்பர தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்தல் விடுத்துவந்த நபர் இன்று மாலை வரை தரையிறங்கவில்லை. இதேவேளை குறித்த நபரை பார்வையிட பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

இந்நிலையில் குறித்த நபரை தீயணைப்பு துறையினர் சற்று முன்னர் கீழே இறக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த தூண் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக