29 செப்டம்பர், 2010

அரியாலையில் நடந்த ஏர்பூட்டு விழா உழவர்களின் ஏர்பூட்டு விழா நேற்று யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட பல அதிகாரிகள் பங்குபற்றினர். அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 2000 விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கென கமநல சேவைகள் திணைக்களத்தினால் சுமார் 17 டிரக்டர்களும் பிராந்திய விவசாய அமைச்சினால் 13 டிரக்டர்களும் வழங்கப்பட்டிருந்தன.

பெரும் போகத்திற்கென விவசாயிகளுக்கு நெல்விதைகளும் வழங்கப்பட்டன.

இம்முறை சுமார் 102,000 ஏக்கர் நிலத்தில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக