29 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு : சென்னையில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்."

சென்னை பொலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

தீர்ப்பு தொடர்பாகக் கண்டன சுரொட்டிகள் அச்சடிக்கவும், ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமை யாளர்களை அழைத்து இது தொடர்பான சுவரொட்டிகள் அச்சடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை கண் காணித்தும் வருகிறோம்.

சோதனை சாவடிகளிலும் மற்றும் வழக்கமான இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக