29 செப்டம்பர், 2010

மன்னார் தனியார் பஸ் நடத்துனர்கள் குறித்து முறைப்பாடு

மன்னாரில் இருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சிலவற்றில் நடத்துனர்கள் தம்முடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மன்னாரில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ்கள் சிலவற்றின் நடத்துனர்கள் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடத்துனர் இளம் பெண்களிடம் பயணக் கட்டணத்தைப் பெற்றுவிட்டு பயணச்சீட்டு வழங்குகையில், அதன் பின்புறத்தில் காதல் வார்த்தைகள் எழுதிக் கொடுப்பதாகவும் அவரின் தொலைபேசி இலக்கங்களை எழுதிக் கொடுத்து போன் எடுக்குமாறு கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்களால் இளம்பெண்கள் தனியாக பஸ்ஸில் பயணிக்க அச்சம் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இத்தகைய சம்பவங்களை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்டோரிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக