29 செப்டம்பர், 2010

உடல்நிலை மோசம் : பௌத்த தேரர் அம்பாறைக்கு மாற்றம்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பௌத்த தேரர் உடல் நிலை மோசமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இன்று மதியம் 1.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தேரர் அம்பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஞாயிறன்று மட்டக்களப்பில் வைத்துத் தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக