29 செப்டம்பர், 2010

தொடர் மழை : மலையகத்தில் மண் சரிவு அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி - நுவரெலியா வீதியில் ரம்பொட நீர்வீழ்ச்சிக்கு அருகில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நீர்வீழ்ச்சிப் பகுதிகளினூடாக வாகனத்தில் செல்வோர் அவதானமாக இருக்கும்படியும், மலைப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேவேளை, கலாவேவ ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், புத்தளம்-மன்னார் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலியில் வெள்ளத்தில் அடிபட்டுசென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் இதுவரை அவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக