29 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் மத்திய மந்திரி பிரபுல்படேல் விமான நிலையத்தில் தவிப்பு; சந்தேகத்தில் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்






மத்திய விமான போக்கு வரத்துதுறை மந்திரி பிரபுல் படேல் கனடா சென்றுள்ளார். வழியில் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையம் சென்றார். அங்கு சந்தேகத்தின் பேரில் அவர் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்தது.

இதனால் அவர் தவித்தார் இது பற்றிய தகவல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதருக்கு தெரிய வந்தது. உடனே அவர் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் பின்னர் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பொதுவாக மத்திய மந்திரி பிரபுல்படேல் சோதனை எதுவுமின்றி பயணம் செய்ய அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதி உள்ளது.

ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பயணிகள் பட்டியலில் அவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் மற்றொரு நபர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு அமெரிக்க உள் பாதுகாப்பு அதிகாரி, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் இதை மத்திய மந்திரி பிரபுல்படேல் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை. பெயர் மற்றும் பிறந்த தேதி குழப்பத்தால் இது போன்று ஏற்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக