12 ஜூலை, 2010

அமெரிக்க உதவியுடன் கிழக்கில் விவசாயத்துறை அபிவிருத்தி

அமெரிக்க அரசாங்கத்தின் யு.எஸ்.எயிட் நிறுவன நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் தனியார் துறையினரின் உதவியுடன் விவசாயத்துறையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட மாநாடு மட்டக்களப்பு 'கோப் இன்' விடுதியில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

அமெரிக்க யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட முகாமையாளர் டி.சில்வா, மாவட்ட திட்டப் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், விவசாயத்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அனுசரணையுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக