12 ஜூலை, 2010

ஐ.நா. நிபுணர்கள் குழுவைக் கலைக்க அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பு பெறத் திட்டம்

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தக் கடிதத்தின் ஊடாக எதிர்பார்த்தளவு வெற்றி கிட்டவில்லை எனவும் இதனால் இலங்கை அரசாங்கம் மீண்டும் அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அமைப்பில் அங்கம் வகிக்கும் 118 உறுப்பு நாடுகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, மனித உரிமை பேரவை மற்றும் இலங்கையின் அனுமதியின்றி நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அணி சேரா நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடுமாறு அணி சேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் இலங்கை மீண்டும் கடிதம் மூலம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹண இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் திருத்தங்களையும் ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகள் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக