12 ஜூலை, 2010

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குள் பிரவேசிக்க முனைந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்ற பயணிகள் விமானத்தில் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் போது அவர்களில் கிலியோன் (சாந்தயோகி -வயது35) என்பவரும் வந்திருந்தார்.

இவர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதால் சாந்தயோகியை இந்தியாவுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பின்னர் விமான நிலைய ஓய்வறையில் அவர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பகல் 12.15 மணிக்கு கொழும்பு வந்ந விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினார்கள். இதனால் இன்று காலையில் சென்னை விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக