12 ஜூலை, 2010

விமலின் நகைச்சுவை நாடகத்தை தயாரிப்பாளரான ஜனாதிபதி நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளார்- கயந்த

விமல் வீரவன்சவை வைத்து அழகாக நகைச்சுவை நாடகத்தை தயாரித்த தயாரிப்பாளரான ஜனாதிபதி மஹிந்த அதனை நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கயன்த இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கயன்த, ஏற்கனவே சகல மக்களும் எதிர்பார்த்தப்படியே ஜனாதிபதி நடத்திய நாடகத்தின் முடிவு அமைந்துள்ளதாக குறிப்பிடும் அவர், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினார்.

இந்த நாடகத்தின் மூலம் விமல் வீரவன்ச தான் விடுத்த சவாலில் தோல்வி கண்டுள்ளதுடன், இந்த நாடகத்தினால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு இப்படி பொய்யான முறையில் தீர்வுகாண முற்படுவதைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியல் தீர்வு காணமுற்பட வேண்டும் எனவும், இலங்கை அரசு அவ்வாறு இராஜதந்திர ரீதியல் தீர்வு காண முற்படுமாயின் அதற்று ஐக்கிய தேசியக் கட்சி தமது முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக