12 ஜூலை, 2010

பான் கீ மூனை எதிர்க்கிறோம்’-பிரதமர்

இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண
இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண
தனி மனிதராகிய ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூன் இறைமையுள்ள இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் பற்றிப் பேச முடியாது என்று இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கே வவுனியாவுக்கு சென்றிருந்த டி.எம்.ஜயரத்ன, அரச செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

‘ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு தனி மனிதர் எவ்வாறு பேசமுடியும், அவர் நாளை அமெரிக்காவுக்கு எதிராக கூட பேசக் கூடும்’ என்றும் இலங்கைப் பிரதமர் கூறியுள்ளார்.

உயிரிழப்பு இல்லாமல் யுத்தம் செய்ய முடியாது எனவும் என்ஜிஓ காரர்கள் தான் இவ்வாறான விசாரணைகளைக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் ஐநாவை எதிர்க்கவில்லையெனவும் பான் கீ மூன் என்ற தனி மனிதரையே எதிர்ப்பதாகவும் இலங்கையின் பிரதமரும் பௌத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சருமாகிய டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக