12 ஜூலை, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியல் 26ஆம் திகதி வரை நீடிப்பு


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியலை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவிலுள்ள தனது மகளுடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்குமாறு சரத் பொன்சேகா விடுத்திருந்த வேண்டுகோளையும் கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

அதேவேளை, ஜெனரல் பொன்சேகாவின் உடல்நலன் கருதி சிறைக்கூடத்துக்கு வெளியே நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கு அவரை அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக