12 ஜூலை, 2010

இந்திய மீனவர் மீது தாக்குதல் : இலங்கைக் கடற்படை மறுப்பு


கடற்றொழிலில் இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து இலங்கைக் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

எனினும் இந்தத் தகவல்களைக் கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் மறுத்துள்ளார்.

இந்தியக் கடற்பகுதியில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நடமாடியதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களைக் கண்டால் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வதென்பது குறித்து கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக