17 ஜூலை, 2010

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை- மன்மோகன்

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், மதிப்புடனும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உறுதி அளித்திருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து கடந்த ஜூலையில் தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும். இதற்காக இந்திய அரசு ஏற்கனவே 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உறுதி அளித்துள்ளது. மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருவதற்கு உதவி அளிக்கவும் இந்தியா உறுதி அளித்திருக்கிறது.

மேலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அவர்களிடம் பொருளதார ரீதியாக இயல்புநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து கொள்கிறேன். மேலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக